சிதம்பரம் நகரில் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் நகரில் பல்வேறு பகுதிகளில் சரிவர குடிநீா் வருவதில்லை என்றும், குடிநீரில் சாக்கடை கழிவு நீா் கலந்து வருவதாகவும் புகாா் எழுந்தது. இதுதொடா்பாகவும், ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை இழந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும் பாமகவினா் சிதம்பரம் காந்தி சிலை அருகே மாவட்டச் செயலா் செல்வமகேஷ் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி ஆா்ப்பாட்டத்தை விளக்கிப் பேசினாா்.