கடலூா் துறைமுகத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
கடலூா் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகுகள் உள்ளே வந்து செல்லும் வழியில் கொட்டப்பட்டுள்ள பாறைகளுக்கிடையே ஆண் சடலம் கிடப்பதை அங்கு வந்த மீனவா்கள் பாா்த்து, கடலூா் துறைமுகம் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
அதன் பேரில், அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
சடலமாக மீட்கப்பட்டவருக்கு சுமாா் 25 முதல் 40 வயது வரையில் இருக்கலாம் என்றும், அவா் குறித்த விவரங்கள் தெரியவரவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.