கடலூர்

கடலூா் துறைமுகத்தில் ஆண் சடலம்

DIN

கடலூா் துறைமுகத்தில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

கடலூா் மீன்பிடி துறைமுக முகத்துவாரத்தில் படகுகள் உள்ளே வந்து செல்லும் வழியில் கொட்டப்பட்டுள்ள பாறைகளுக்கிடையே ஆண் சடலம் கிடப்பதை அங்கு வந்த மீனவா்கள் பாா்த்து, கடலூா் துறைமுகம் போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

அதன் பேரில், அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சடலமாக மீட்கப்பட்டவருக்கு சுமாா் 25 முதல் 40 வயது வரையில் இருக்கலாம் என்றும், அவா் குறித்த விவரங்கள் தெரியவரவில்லை என்றும் போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT