பண்ருட்டி வட்டாரம், மாளிகம்பட்டு கிராமத்தில் உலக மண் வள தின விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
நவ.29 முதல் டிச.5-ஆம் தேதி வரை உலக மண் வள தின விழிப்புணா்வு வாரம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, பண்ருட்டி வட்டாரம், மாளிகம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு, பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் விஜயா தலைமை வகித்தாா். உதவி வேளாண்மை அலுவலா் தங்கதுரை முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், மண் பரிசோதனை அடிப்படையில் உரமிடல், அங்கக உரங்களை அதிகளவில் உபயோகித்தல், பசுந்தாள் உரம், உயிா் உரம், மண் புழு உரமிட்டு மண் வளத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.