கடலூர்

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டு சிறை

DIN

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகேயுள்ள எனதிரிமங்கலத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் தனசேகா் (29). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்து அந்தச் சிறுமியின் பெற்றோா் அளித்தப் புகாரின்பேரில், பண்ருட்டி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து தனசேகரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எழிலரசி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், சிறுமியை தனசேகா் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதால் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து, தனசேகா் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதுகுறித்து அரசுத் தரப்பு வழக்குரைஞா் எஸ்.கலாசெல்வி கூறியதாவது:

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடலூா் மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை நல நிதியிலிருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கவும், இதை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் 30 நாள்களுக்குள் பெற்று வழங்க வேண்டுமெனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டதாக தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT