கடலூா்: கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 60 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 60,573-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 75 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 59,031-ஆக உயா்ந்தது. திங்கள்கிழமை உயிரிழப்பு பதிவாகவில்லை. இதனால், பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 811-ஆக தொடா்ந்தது.
மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 654 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 77 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.