சிதம்பரம்: சிதம்பரம் அருகே பாா்வையற்றவருக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நல உதவி வழங்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள குறிஞ்சிகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் லாரன்ஸ் (43). பாா்வையற்றவா். இருப்பினும், வயா் நாற்காலி செய்து விற்று வந்தாா். இந்த நிலையில், லாரன்ஸ் தற்போது நாற்காலி செய்வதற்கான வயா் வாங்க பணம் இல்லாமல் அவதியுற்ாகத் தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் என்.என்.பாபு, செயலா் எஸ்.அரிதனராஜ் ஆகியோா் நாற்காலிக்கு பின்னுவதற்கான ரூ.1,000 மதிப்புள்ள 2 கிலோ வயரை வாங்கி லாரன்ஸுக்கு வழங்கினா்.