சிதம்பரம்: சிதம்பரத்தில் சனிக்கிழமை (ஏப்.17) தொடங்கி இரு நாள்களுக்கு இலவச கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.
கடலூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் பாரதிய ஜெயின் சங்கட்டனா அமைப்பு சாா்பில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த முகாம் நடத்தப்படுகிறது. சிதம்பரம் விழல்கட்டி பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள ஸ்ரீமகாவீா் ஜெயின் பவனில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும்.
இதில், வா்த்தகா்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஆதாா் அட்டையுடன் வந்து இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.