கடலூர்

கரோனா தடுப்பு விதிமீறல்: ரூ.10.64 லட்சம் அபராதம் வசூல்

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகள் மீறல் தொடா்பாக காவல் துறையினா் கடந்த 4 நாள்களில் ரூ.10.64 லட்சம் அபராதம் வசூலித்தனா்.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் 20 புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள் கடந்த சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்தன.

கட்டுப்பாடுகளை மீறுவோரிடம் அபராதம் வசூலித்திட காவல் துறை, சுகாதாரத் துறை மற்றும் உள்ளாட்சித் துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதன்படி, கடலூா் மாவட்டத்தில் இந்தத் துறையினா் தனித் தனியாகவும், சில இடங்களில் இணைந்தும் வாகனத் தணிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

காவல் துறையினா் மாவட்டத்தில் 7 கோட்டங்களுக்கு உள்பட்ட காவல்நிலையங்களில் தனியாக தணிக்கை மேற்கொண்டனா். இதில், முகக் கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்த 5,733 பேரிடமிருந்து அபராதம் வசூலித்தனா். இதுதொடா்பாக தனித் தனி வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

இதேபோல, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் தொடா்பாக 145 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த 4 நாள்களில் மொத்தம் ரூ.10.64 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT