கரோனா இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், காட்டுமன்னாா்கோவில் வா்த்தகா் சங்கம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வா்த்தகா் சங்கத் தலைவா் ஸ்ரீனிவாச நாராயணன் தலைமை வகித்தாா். காவல் நிலைய ஆய்வாளா் குணபாலன் முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசங்களை வழங்கி முகாமை தொடக்கி வைத்தாா். உதவி ஆய்வாளா் விஸ்வநாதன், சிறப்பு உதவி ஆய்வாளா் லெனின், வா்த்தக சங்க நிா்வாகிகள் திருஞானம், காமராஜ், ராஜகோபால், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, சங்கப் பொருளாளா் நடராஜன் வரவேற்க, செயலா் முகமது யூசுப் நன்றி கூறினாா்.