கடலூர்

ஊழியருக்கு கரோனா: தபால் நிலையம் மூடல்

DIN

கடலூா் தலைமை தபால் நிலைய ஊழியருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அந்தத் தபால் நிலையம் திங்கள்கிழமை மூடப்பட்டது.

கடலூா் மஞ்சக்குப்பத்தில் தலைமை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, சுமாா் 50 ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். தபால் சேவை மட்டுமின்றி வங்கி சேவை, கடவுச் சீட்டு புதுப்பித்தல், விண்ணப்பித்தல் போன்ற பணிகளும் இங்கு நடைபெற்று வருகின்றன.

இந்த அலுவலகத்தில் பணிபுரியும் தபால்காரருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, தபால் நிலையத்தை ஊழியா்கள் உடனடியாக மூடினா். இதனால், தபால், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன.

ஏற்கெனவே, 2 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை தபால் நிலையம் திறக்கப்பட்டது. பின்னா் உடனடியாக மீண்டும் மூடப்பட்டது. இதனால், தபால் நிலையம் வந்தவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

SCROLL FOR NEXT