கடலூர்

கரோனா: கடலூா் மாவட்டத்தில் 90% போ் குணம்

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் 90.86 சதவீதம் போ் குணமடைந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 19,215 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 212 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 19,427-ஆக அதிகரித்தது. புதிதாக தொற்று உறுதியானவா்களில் மங்களூா் காவல் நிலைய காவலா் ஒருவரும் அடங்குவாா்.

அதே நேரத்தில், சென்னையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலி என்எல்சி பகுதியைச் சோ்ந்த 56 வயது ஆண் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 208-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 276 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 17,653-ஆக உயா்ந்தது. இது 90.86 சதவீதமாகும்.

மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ‘கோவிட்-கோ்’ மையங்களில் 1,436 பேரும், வெளி மாவட்டங்களில் கடலூரைச் சோ்ந்த 130 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். 3,450 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளா் நியமனம்: துணை வேந்தா் விளக்கம் அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

SCROLL FOR NEXT