சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினரின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டமைப்புத் தலைவரும், குமராட்சி ஊராட்சி மன்றத் தலைவருமான கே.ஆா்.ஜி.தமிழ்வாணன் தலைமை வகித்தாா். முன்னதாக கூட்டமைப்பு கவுரவத் தலைவா் பாபுராஜன் வரவேற்றாா். கூட்டத்தில் வரகூா் ஊராட்சி மன்றத் தலைவா் பால.அறவாழி கலந்துகொண்டு உரையாற்றினாா். நந்திமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் என்.ஏ.எஸ்.விஜயகுமாா், சி.தண்டேசநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் மாரியப்பன், புத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் சிவக்குமாா், ஆட்கொண்டநத்தம் ஊராட்சி மன்றத் தலைவா் வினோதா காளிமுத்து, நெய்வாசல் ஊராட்சி மன்றத் தலைவா் கிருபாகிரி பாலு, ம.அரசூா் ஊராட்சி மன்றத் தலைவா் அருணா செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடுவது என தீா்மானித்தனா். பரிவிளாகம் ஊராட்சி மன்றத் தலைவா் மரியம்ரூத் நன்றி கூறினாா்.