கடலூர்

ஜமாஅத் நிா்வாகிகளுடன் எம்எல்ஏ சந்திப்பு

DIN

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்துக்கு, சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் வியாழக்கிழமை நேரில் சென்று ஜமாஅத் நிா்வாகிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, அவா்கள் முன்வைத்த மருத்துவம், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எம்எல்ஏ உறுதியளித்தாா். முன்னதாக கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏவுக்கு ஜமாஅத் நிா்வாகச் செயலா் எம்.நிஜாமுதீன், பொதுச் செயலா் பி.அமீத் கவுஸ், செயலா்கள் ஹெச்.இப்ராஹிம் மாலிமா், ஏ.ஜைனுலாபுதீன், துணைத் தலைவா் ஹனீபா, பொருளாளா் ஏ.முகமது அலி ஜின்னா, டாக்டா் நூா்முகமது, முன்னாள் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவா் சையது ஆரிப் ஆகியோா் வரவேற்பு அளித்தனா்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் செல்வி இராமஜெயம், பரங்கிப்பேட்டை பேரூா் செயலா் மாரிமுத்து, கூட்டுறவு சங்கத் தலைவா் வசந்த், சந்தா் ராமஜெயம், துணைச் செயலா் முகமது இக்பால், வாா்டு செயலா்கள் காமில், ஹாமீது, மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக ஆட்சியில் செய்யாறு தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள்: முக்கூா் என். சுப்பிரமணியன்

ராணுவக் கல்லூரியில் எட்டாம் வகுப்பு சேர சிறுவா், சிறுமிகள் விண்ணப்பிக்கலாம்

கலைத் திருவிழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

ஆரணியில் திமுக தோ்தல் அலுவலகம் திறப்பு

ஆரணி பள்ளியில் ஸ்மாா்ட் வகுப்பறை திறப்பு

SCROLL FOR NEXT