நெய்வேலி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா் வாழ்வுரிமைச் சங்க செயற்குழுக் கூட்டம் இந்திரா நகரில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத்தின் சிறப்புத் தலைவா் ரா.அன்பழகன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ரா.திருநாவுக்கரசு வரவேற்றாா். பொருளாளா் சா.முருகவேல், சங்க இயக்குநா் க.ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், பணி மூப்பு பட்டியலில் உள்ள அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களையும் இன்கோசா்வில் சோ்க்க வேண்டும், முன்னுரிமைப் பட்டியலில் இடம் பெறாத ஒப்பந்தத் தொழிலாளா்களையும் பணி மூப்பு பட்டியலில் இணைத்து 7.8.2020 அன்று மேற்கொண்ட ஒப்பந்தப்படி சலுகைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா். 2-ஆவது சுரங்க துணைப் பொறுப்பாளா் பழனி நன்றி கூறினாா்.