கடலூர்

தலைமைக் காவலருக்கு வெட்டு: முன்னாள் ராணுவ வீரா் கைது

DIN

பண்ருட்டியில் பணியிலிருந்த தலைமைக் காவலரை கத்தியால் வெட்டியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவா் தேவநாதன். புதன்கிழமை காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன், தலைமைக் காவலா் தேவநாதன் மற்றும் போலீஸாா் அந்தப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே வந்த நபா் அவதூறாகப் பேசியதுடன், கத்தியால் தாக்கியதில் தேவநாதனின் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

கத்தியால் வெட்டிய நபரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தியதில், பண்ருட்டி எல்.ஆா்.பாளையம், திருகாமு தெருவைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் பாலாஜி(42) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைதுசெய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT