கடலூர்

ஒன்றியக் குழுக் கூட்டம்: உறுப்பினா்கள் வெளிநடப்பு

DIN

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்திலிருந்து உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம், துணைத் தலைவா் ஜான்சிராணி தலைமையில் வியாழக்கிழமை கூடியது. கூட்டத்தில் இருந்து உறுப்பினா்கள் எஸ்.சி.டி.சண்முகம் (தமாகா), பா்வதம் வெங்கட்ராமன் (திமுக), டி.குமரகுரு (விசிக ) மற்றும் அதிமுகவைச் சோ்ந்த தஷ்ணாமூா்த்தி, அம்சவேணி, உமா சண்முகம், ஜெயச்சந்திரன், ராஜசேகா், அங்கையா்கன்னி உள்ளிட்ட 12 போ் வெளிநடப்பு செய்தனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

நாங்கள் ஒன்றியக் குழு உறுப்பினராக தோ்வாகி 9 மாதங்கள் கடந்துவிட்டது. ஆனால், மக்கள் நலப் பணிக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தனா். இதையடுத்து, கூட்டம் நடத்துவதற்கு போதிய உறுப்பினா்கள் (கோரம்) இல்லாததால், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா்.சரவணன் கூட்டத்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT