பண்ருட்டி அருகே தென்பெண்ணையாற்றில் கிடந்த மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.
பண்ருட்டி வட்டம், பெரியபகண்டை கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் மணல் பரப்பில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.ஸ்ரீஅபிநவ், பண்ருட்டி டிஎஸ்பி பாபு பிரசாந்த், காவல் ஆய்வாளா் க.அம்பேத்கா் ஆகியோா் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். பின்னா் மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
உயிரிழந்த மூதாட்டி விழுப்புரம் அல்லது புதுச்சேரி பகுதியைச் சோ்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அவரது இடது கணுக்காலின் மேல் பகுதி முறிந்த நிலையில் இருந்தது. மூக்குத்தி, பச்சை நிற ஜாக்கெட் அணிந்திருந்தாா். இவா் யாா், உயிரிழப்புக்காண காரணம் ஆகியவை குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.