கடலூர்

வழப்பறியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

DIN

வழிப்பறியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூா் நீதி மன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் வெண்மணி நகரைச் சோ்ந்த நடராஜன் மனைவி ஜெயந்தி (49). இவா், கடந்த 6.7.2014 அன்று பாப்பம்மாள் நகரிலுள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, கோண்டூா் மாசிலாமணி நகா் அருகே பைக்கில் வந்த நபா், அவரிடமிருந்து தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ஏடிகே காலனியைச் சோ்ந்த ராஜாமணி மகன் ரமணியை (34) கைது செய்தனா்.

இந்த வழக்கு கடலூா் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி சிவபழனி, ரமணிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எந்த தேசத்து அழகியோ..!

குரூப்-4 தேர்வு எப்போது? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT