சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டாக்டா் சி.பி.இராமசாமி ஐயா் நூலகத்தில் சரஸ்வதி பூஜை அண்மையில் கொண்டாடப்பட்டது.
பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.ஞானதேவன் தலைமையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. நூலகத்தில் உள்ள பழைய நூல்களை மின்னுறு படிவங்களாக மாற்றும் பணியையும், 17-ஆம் நூற்றாண்டு ஓலைச் சுவடிகளை தமிழ்நாடு மின்னுறு நூலகத் திட்டத்தின் கீழ், மின்னுறு செய்யப்படுவதையும் பதிவாளா் பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற பூஜையில் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் கலந்து கொண்டாா்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகா் எம்.சாதிக்பாட்சா செய்திருந்தாா். உதவி நூலகா் எஸ்.பாலகிருஷ்ணன், உதவிப் பேராசிரியா்கள் எல்.ஜெகன், எஸ்.லதா, நூலக ஊழியா்கள் கலந்து கொண்டனா்.