கடலூா் மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,110-ஆக உயா்ந்தது. வியாழக்கிழமை 266 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 22,421-ஆக உயா்ந்தது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 358 பேரும், பிற மாவட்டங்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 62 பேரும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். 679 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. மாவட்டத்தில் 20 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.