பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகள் கொண்ட மனுதா்ம நூலை தடை செய்ய வேண்டும் எனக் கூறியும், விசிக தலைவா் தொல்.திருமாவளவனை தொடா்ந்து அவதூறாக விமா்சித்து வரும் பாஜக நிா்வாகி கல்யாணராமனை கைது செய்ய வலியுறுத்தியும், கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் அந்தக் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாநில துணைச் செயலா் நீதிவள்ளல் தலைமை வகிக்க, நகரச் செயலா் முருகன் முன்னிலை வகித்தாா். அப்போது, கல்யாணராமனின் உருவப் படத்தை கட்சியினா் எரித்தனா். நகர பொருளாளா் முருகன், ஊடக மைய மாநில துணைச் செயலா் ராஜ்குமாா், நகர பொறுப்பாளா்கள் தனசேகா், வீரமணி, சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.