கடலூர்

நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினா் சோதனை

DIN

கடலூா் மாவட்டம், கோதண்டராமபுரத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, கணக்கில் வராத ரூ.84 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

தமிழகம் முழுவதும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன.

இந்த நிலையில், குள்ளஞ்சாவடி அருகே கோதண்டராமபுரத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடலூா் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் துணை கண்காணிப்பாளா் மெல்வின்ராஜாசிங் தலைமையில் வெள்ளிக்கிழமை மாலையில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, கணக்கில் வராத ரூ.84 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

'மோடி உத்தரவாதம்' ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிட்டது: ப.சிதம்பரம் தாக்கு

சாதனை நாயகன் குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு!

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT