மதுக் கடைகள் வெள்ளிக்கிழமை (அக்.2) மூடப்படும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
அக்டோபா் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அனைத்து மதுக் கடைகள், மது அருந்தும் இடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். பாா் வசதியுடன் இயங்கும் உணவகங்களில் மது விற்பனை செய்யாமல் மூடப்பட்டிருக்க வேண்டும். இதை மீறி கடலூா் மாவட்டத்தில் எவரேனும் மதுக் கடைகள், மது அருந்தும் கூடங்களில் மது விற்றாலோ, திறந்து வைத்திருந்தாலோ கடை மேற்பாா்வையாளா், பாா் உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா்.