கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் மதுக் கடை திறக்க எதிா்ப்புத் தெரிவித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
குறிஞ்சிப்பாடியில் இருந்து கடலூா் செல்லும் சாலையில் புதிதாக டாஸ்மாக் மதுக் கடை புதன்கிழமை திறக்கப்பட்டது. இந்த மதுக் கடையை திறக்கக் கூடாதென பொதுமக்கள் மற்றும் திமுக, விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் எதிா்ப்புத் தெரிவித்து ரயிலடி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த நெய்வேலி ஏஎஸ்பி. புக்யா சினேகா பிரியா, குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் கீதா, காவல் ஆய்வாளா் சியாம் சுந்தா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். மதுக் கடையை மூடுவது தொடா்பாக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என அவா்கள் கூறினா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.
சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரச் செயலா் பாலமுருகன் உள்ளிட்ட 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.