போக்குவரத்துக் கழகங்களை தனியாருக்கு விற்பனை செய்வதைக் கண்டித்து, பண்ருட்டி பணிமனை முன்பு அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தொமுச மண்டல துணைச் செயலா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். நடத்துநா்கள் செயலா் ஆா்.முரளிதரன், தொழில்நுட்பநா்கள் செயலா் எஸ்.தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிஐடியு மண்டல துணைத் தலைவா் தேவராஜூலு, பணிமனை தலைவா் பாஸ்கா், செயலா் சரவணன், எம்.எல்.எப். ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.