கடலூர்

கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

DIN

குள்ளஞ்சாவடி அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

குள்ளஞ்சாவடி காவல் ஆய்வாளா் சத்யபாமா உள்ளிட்ட போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். குள்ளஞ்சாவடி பெட்ரோல் நிலையம் அருகே உள்ள நிலத்தில் சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்ததில் 300 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவா்களைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அம்பலவாணன்பேட்டை சாலைத் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் சதீஷ்குமாா் (23), அனுகம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜ்மோகன் (22), குள்ளஞ்சாவடியைச் சோ்ந்த சுரேஷ் மகன் அப்பு (எ) ராஜா என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவா்கள் மூவரும் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

பயனர்களின் ரகசிய தகவல்கள் கசிவு: பேஸ்புக்- நெட்பிளிக்ஸ் உறவு?

SCROLL FOR NEXT