கடலூர்

அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு

28th Jan 2020 08:30 AM

ADVERTISEMENT

குடியரசு தினத்தையொட்டி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் இந்திய அரசியல் சாசன முன்னுரையை வாசித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நெய்வேலி வட்டம் 25-இல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகரச் செயலா் ஆா்.பாலமுருகன் தலைமை வகித்தாா். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் சாசன முன்னுரையை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனா். பின்னா் அவா் பேசுகையில், மத்திய பாஜக அரசு நாட்டின் மதச் சாா்பற்ற கொள்கையை தகா்க்கும் வகையில் செயல்படுவதைக் கண்டித்து வருகிற பிப்.2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த கட்சி முடிவெடுத்துள்ளதாகக் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT