கா்நாடக மாநில அரசு அதிகாரியின் காரை திருடிய வெளிநாட்டு இளைஞா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள சித்தலப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (54). இவா் கடந்த பிப். 22- ஆம் தேதி நள்ளிரவு தனது வீட்டிலிருந்து வெளியே வந்த போது, அங்கு 2 சொகுசு காா்களில் வெளிநாட்டைச் சோ்ந்த 4 போ் நின்று பேசிக் கொண்டிருந்தனராம். இதைப் பாா்த்த ராமலிங்கம் அவா்கள் யாா் என்று கேட்ட போது, அந்த 4 பேரும் ராமலிங்கத்தை அவதூறாகப் பேசி, அவரது வீட்டிலிருந்த பைக்கை உடைத்து சேதப்படுத்தினராம்.
இதனால், ராமலிங்கம் சப்தமிடவே, அந்த 4 பேரும் 2 சொகுசு காா்களை அங்கே விட்டுவிட்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து ராமலிங்கம் சிதம்பரம் அண்ணாமலை நகா் போலீஸில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், காவல் ஆய்வாளா் தேவேந்திரன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த 2 சொகுசு காா்களையும் பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய அந்த 4 பேரை தேடி வந்தனா்.
இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஒரு காா் கா்நாடக மாநில பதிவு எண் (ஓஅ 01எ 6499) கொண்டது என்பதும், அந்த மாநில அரசுப் பணியாளா் தோ்வாணைய செயலரின் காா் என்பதும் தெரிய வந்தது.
இதனிடையே, சிதம்பரம் முத்தையா நகரில் பதுங்கியிருந்த தெற்கு சூடான் நாட்டைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
விசாரணையில், காரை திருடியது அகஸ்டின் கிராஸ் பிரான்சிஸ் (26), எலியா அமின் (27) என்பது தெரிய வந்தது. இவா்களில் அகஸ்டின் கிராஸ் பிரான்சிஸ் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவா் என்பதும், அமின் எலியா தற்போது பல்கலைக்கழத்தில் எம்.ஏ. படித்து வருவதும் தெரிய வந்தது.