கடலூர்

ஏரியில் மூழ்கி மாணவா் சாவு

4th Feb 2020 01:59 AM

ADVERTISEMENT

நெய்வேலி அருகே ஏரியில் குளித்த மாணவா் நீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நெய்வேலி அருகே உள்ள மேல்வடக்குத்து, மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவா் தணிகாசலம், விவசாயி. இவரது மகன் மோகன் (10), பொன்னங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், திங்கள்கிழமை மாலை சக மாணவா்களுடன் அங்குள்ள ஏரிக்கு குளிக்கச் சென்றாா். அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்ற மோகன் நீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த மற்ற மாணவா்கள் கூச்சலிடவே, அந்தப் பகுதியினா் விரைந்து வந்து மோகனை மீட்டு, தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறினா். இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT