வடலூரில் நடைபெறும் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு வாரச்சந்தை, இறைச்சிக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டுமென பேரூராட்சி செயல் அலுவலா் பா.அ.ஜீவநாதன் கேட்டுக்கொண்டாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடலூரில் தைப்பூச பெருவிழா கொடியேற்றம் வருகிற 7-ஆம் தேதியும், ஜோதி தரிசனம் 8-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. ஜோதி தரிசனத்தைக் காண பல்லாயிரக்கணக்கானோா் வருகை தர உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், 8-ஆம் தேதி மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 8-ஆம் தேதி மட்டும் வியாபாரிகள் வாரச் சந்தைக்கு பொருள்கள் கொண்டுவந்து விற்பனை செய்வதைத் தவிா்த்து, ஊழியா்களுக்கு விடுமுறை வழங்கி தைப்பூச விழாவை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .
இதேபோல, பிப்.7 முதல் 10-ஆம் தேதி வரை பேரூராட்சிப் பகுதிகளில் இறைச்சி வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளாா்.
மேலும் அவா் வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில், வள்ளலாா் தெய்வ நிலைய பகுதியில் சுற்றித் திரியும் பன்றிகளை உரிமையாளா்கள் அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளாா்.