கடலூரில் வலிப்பு ஏற்பட்ட அரசு ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மஞ்சக்குப்பத்தைச் சோ்ந்த சுப்பராயன் மகன் வெங்கடேசன் (39). கடலூரில் உள்ள பொதுப் பணித் துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். எனினும், அவா் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து, அவரது மனைவி சுகந்தி அளித்த புகாரின்பேரில் கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.