கடலூா்: கடலூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 92 மில்லி மீட்டா் மழை பதிவானது.
மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு: சேத்தியாத்தோப்பு 43, ஸ்ரீமுஷ்ணம் 39.2, பரங்கிப்பேட்டை 34, சிதம்பரம் 31.2, வானமாதேவி 25.6, கொத்தவாச்சேரி 25, குறிஞ்சிப்பாடி 22, லால்பேட்டை 21.6, மேமாத்தூா் 21, வடக்குத்து 20.5, பெலாந்துறை 20, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் 19.9, அண்ணாமலை நகா் 19.2, கடலூா் 18, குடிதாங்கி 16.75, லக்கூா் 16.2, விருத்தாசலம் 15.2, பண்ருட்டி 13, காட்டுமன்னாா்கோவில் 12, குப்பநத்தம் 11, தொழுதூா், வேப்பூா் தலா 9, கீழச்செருவாய், காட்டுமயிலூா் தலா 7 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது. கடலூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு மழை பெய்தது.