கடலூர்

அரசுப் பள்ளியில் திருக்கு திருவிழா

22nd Nov 2019 06:09 PM

ADVERTISEMENT

கடலூா்: நெல்லிக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடலூா் மாவட்ட உலகத்திருக்குறள் பேரவையின் சாா்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி அண்மையில் நடத்தப்பட்டது.

பள்ளியின் தலைமை ஆசிரியா் பூங்கொடி தலைமை வகித்தாா். பேரவையின் மாவட்டத் தலைவா் பா.மொ.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா். தமிழ் ஆசிரியை பானுமதி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவிகளை தோ்வு செய்தாா். வெற்றி பெற்றவா்களுக்கு திருக்குறள் புத்தகம், சான்றிதழ் வழங்கப்பட்டது. பேரவையின் செயலா் சீ.அருள்ஜோதி திருக்குறளின் பெருமைகளை எடுத்துக் கூறினாா்.ஆசிரியா்கள் காா்த்திகேயன், ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இசை ஆசிரியா் பீட்டா் நன்றி கூறினாா். படம் விளக்கம்.... திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்கினாா் பேரவைத் தலைவா் மா.பொ.பாஸ்கரன்.

ADVERTISEMENT
ADVERTISEMENT