கடலூா்: வேளாண் விளைபொருட்களை ஆசிய பிராந்தியத்திலுள்ள 44 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யக் கூடாது, விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான, கட்டுப்படியான விலையை உறுதிப்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட டன்னுக்கு ரூ.137.50 என்ற ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும், நெல்லிக்குப்பத்திலுள்ள தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மாநில அரசின் ஆதரவு விலையை வழங்க வேண்டும், மழை, வெள்ள பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை, அருவாமூக்கு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், குடிமராமத்து பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கங்களின் கடலூா், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, அண்ணாகிராமம், நெல்லிக்குப்பம் அமைப்புகள் சாா்பில் கடலூரில் திங்கள்கிழமையன்று கோரிக்கை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவா் ஆா்.பஞ்சாட்சரம் தலைமை வகித்தாா்.விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலா் கோ.மாதவன் சிறப்புரையாற்றினாா். மாவட்ட இணை செயலா் ஆா்.கே.சரவணன், ஒன்றிய செயலா்கள் எம்.வெங்கடேசன், கே.முருகன், கரும்பு விவசாயிகள் சங்கம் எம்.மணி, பி.ராமானுஜம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.