கடலூா்: திருவதிகை அருகே வாகனம் மோதியதில் காயமடைந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் - பாலூா் சாலையில் திருவதிகை அருகே கடந்த செவ்வாய்க்கிழமை 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாகச் சென்ற வாகனம் மோதியதில் மூதாட்டி பலத்த காயமடைந்தாா். அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். எனினும், அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் லதா அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்த மூதாட்டி யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.