வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தீயணைப்பு குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
வடலூர் ஓபிஆர் கல்வி நிறுவனங்களின் செயலர் ரா.செல்வராஜ் தலைமையில், குறிஞ்சிப்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய அலுவலர் கா.ராஜேந்திரன், முன்னணி தீயணைப்பாளர் எஸ்.சங்கர் ஆகியோர், தீயணைப்பு கருவியை பயன்படுத்தி தீயை எவ்வாறு கட்டுப்படுத்துவது, தீ பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து அங்கு பணிபுரியும் பள்ளி ஆசிரியர்கள், அறிவியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு விளக்கம் அளித்தனர். பள்ளி தலைமையாசிரியர் எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.