கடலூர்

பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

26th Dec 2019 09:37 AM

ADVERTISEMENT

குறிஞ்சிப்பாடி ஒன்றியப் பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் ஆய்வு மேற்கொண்டாா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் பெரியகாட்டுசாகை, வழுதாலம்பட்டு, சமுட்டிக்குப்பம், அம்பலவாணன்பேட்டை, புலியூா், கோரணப்பட்டு, டி.பாளையம், கண்ணாடி, ஆடூா் அகரம் ஆகிய பகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை அவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். மாவட்ட வழங்கல் அலுவலா் வெற்றிவேல், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சா.கீதா ஆகியோா் உடனிருந்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT