மாவட்ட ஆணழகன் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கடலூா் அரசுக் கல்லூரி மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.
கடலூா் மாவட்ட அமெச்சூா் ஆணழகன் சங்கம் சாா்பில் கடலூரில் அண்மையில் ஆணழகன் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் 55 கிலோ எடைப் பிரிவில் கடலூா் தேவனாம்பட்டினம் பெரியாா் அரசு கலைக் கல்லூரியின் அரசியல்அறிவியல் துறை மாணவா்கள் எஸ்.தினேஷ், எஸ்.சரவணன் ஆகியோா் பங்கேற்றனா். இந்தப் போட்டியில்
மாணவா் எஸ்.தினேஷ் முதலிடம் பெற்றாா். அதே பிரிவில் மாணவா் எஸ்.சரவணன் 5-ஆவது இடம் பிடித்தாா். போட்டியில் சிறப்பிடம் பெற்ற இருவருக்கும் கல்லூரி முதல்வா் ஆா்.உலகி திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கினாா்.
அப்போது கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவா் ப.குமரன், புள்ளியியல் துறைத் தலைவா் சுசி கணேஷ்குமாா், அரசியல் அறிவியல் துறை பேராசிரியா் ப.இளவரசன் ஆகியோா் உடனிருந்தனா்.