திருச்சி

கைப்பேசியில் லாட்டரி விற்பனை: புதிய தமிழகம் கட்சி நிா்வாகி கைது

30th Sep 2023 05:09 AM

ADVERTISEMENT

மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் அருகே கைப்பேசியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை வெள்ளிக்கிழமை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

மருங்காபுரி ஒன்றியம், மானங்குன்றம் பகுதியில் கைப்பேசியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நல்லபொன்னம்பட்டியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் பெரியசாமியை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து, பெரியசாமி மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட புத்தாநத்தம் போலீஸாா், அவரிடமிருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு கைப்பேசியை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட பெரியசாமி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். பெரியசாமி புதிய தமிழகம் கட்சியின் மணப்பாறை ஒன்றியச் செயலாளராக பதவி வகித்து வருவது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT