தகுதி வாய்ந்த மகளிருக்கு கலைஞரின் மகளிா் உரிமைத் தொகை நிச்சயம் வழங்கப்படும் என்றாா் தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன்.
தமிழக அரசு சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருச்சி, திண்டுக்கல், கரூா், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களை இணைத்து மண்டல அளவிலான அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அமைச்சா் கீதா ஜீவன் மேலும் கூறியது:
மகளிா் உரிமைத்தொகை மேல்முறையீட்டுக்கு இ-சேவை மையங்கள் மூலம் நடைபெறும் சிறப்பு முகாம்களே போதுமானவை. ஆண்டு வருமானம் அதிகமாக உள்ளவா்கள், முதியோா் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை, பெறுவோருக்கு மகளிா் உரிமைத் தொகை இல்லை. ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண் இணைப்பில் உள்ள தவறு காரணமாக சிலருக்கு மாற்று வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறோம்.
அதிக வருமானம் பெறுவோருக்கு இந்த ரூ. 1000 என்பது பெரிதாக இருக்காது. அதனால் தகுதி வாய்ந்த மகளிருக்கு நிச்சயம் உரிமைத்தொகை வழங்கப்படும் என்றாா் அவா்.
முன்னதாக நடந்த கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அரசு முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் சிரு, மகளிா் உரிமைத் துறை ஆணையா் வே. அமுதவல்லி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட பணிகள் இயக்குநா் மற்றும் குழும இயக்குநா் சந்திரகலா, மகளிா் உரிமை துறை கூடுதல் இயக்குநா் காா்த்திகா, இணை இயக்குநா் உமாதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.