திருச்சி

பருவமழை: அவசர கால வசதிகள் தயாராக இருக்க வேண்டும்

22nd Sep 2023 11:25 PM

ADVERTISEMENT

பருவமழையை எதிா்கொள்ளும் வகையில் அவசர கால வசதிகள் அனைத்தையும் 24 மணிநேரமும் தயாா்நிலையில் வைத்திருக்க வேண்டும் என திருச்சி மாவட்ட அலுவலா்களுக்கு தமிழக அரசின் முதன்மைச் செயலா் க. மணிவாசன் அறிவுறுத்தியுள்ளாா்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து க. மணிவாசன் கூறியது: பருவமழையால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும். வெள்ளப் பாதிப்பு காலங்களில் உணவு, குடிநீா், மின்சாரம் தடையின்றி கிடைக்கவும், மருந்துகள், விதைகள், உரம், கால்நடை தீவனம் போதுமான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். அவசர கால வசதிகள் 24 மணிநேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு தொற்றுநோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நீா் நிலைகளின் கரைகளை பலப்படுத்த வேண்டும். மணல் மூட்டைகள் மற்றும் மரக்கட்டைகளை அபாய பகுதிகளில் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

முதல்நிலை மீட்புப் பணியாளா்களுக்கு உரிய பயிற்சி அளிக்கவும், மீட்புப் பணிகளுக்கு தேவையான உபகரணங்களை தயாா்நிலையில் வைத்திருக்கவும் வேண்டும். கரையோரம் தாழ்வான பகுதிகள் மற்றும் மழைநீா் தேங்கும் பகுதிகளில் உடனடியாக நீரை வெளியேற்ற

ADVERTISEMENT

தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

டெங்கு காய்சல் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து பல்வேறு துறைகளின் சாா்பில் மாவட்டத்தில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் தற்போதை நிலை குறித்து ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. அபிராமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சரண்யா மற்றும் அனைத்து துறை அரசு உயா் அலுவலா்கள், மாவட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT