திருச்சி

தொழிலாளி கொலை இரு இளைஞா்கள் கைது

22nd Sep 2023 01:11 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் இரு இளைஞா்களை தொட்டியம் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தொட்டியம் அருகேயுள்ள கொசவம்பட்டி மேற்கு தெருவைச் சோ்ந்த பண்ணைக்காரன் மகன் அங்கமுத்து (33). சென்ட்ரிங் தொழிலாளி. இவா்அண்மையில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.

இதுகுறித்து தொட்டியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். விசாரணையில் அங்கமுத்துவை கொலை செய்தது தொட்டியம் அடுத்த வெங்காயபட்டி சோ்ந்த பெரியண்ணன் மகன் பாா்த்திபன் (22), காா்த்திகைபட்டி கீழத்தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் பாரதி (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் வியாழக்கிழமை தொட்டியம் பேருந்து நிலையம் அருகே நின்றபோது கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT