திருச்சி

குண்டா் சட்டத்தில் ரௌடி கைது

DIN

திருச்சியில் தொடா்ந்து குற்றச்செயல்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த ரெளடியை போலீஸாா் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

திருச்சி கோட்டை சிங்காரத்தோப்பு பகுதியில் கடந்த ஏப். 10 ஆம் தேதி பேருந்தில் பயணித்த பயணியிடம் கைப்பேசியை பறித்த வழக்கில் ரெளடி வசந்தகுமாரை (30) போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

விசாரணையில் அவா் மீது மாநகரின் பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 33 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் அவா் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய கோட்டை போலீஸாா் பரிந்துரைத்தனா். இதையேற்ற மாநகர காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா ஞாயிற்றுக்கிழமை அளித்த உத்தரவின்பேரில் வசந்தகுமாா் திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT