திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ரூ.9.64 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூரிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை வந்தது. பயணிகளிடம் சுங்கத்துறையினா் நடத்திய சோதனையில் ஆண் பயணி ஒருவா் கொண்டு வந்த மாவு அரைவை இயந்திர பாகங்களில் மறைத்து கடத்தி வந்த ரூ. 9.64 லட்சம் மதிப்பிலான 159 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.