திருச்சி

நகைப் பட்டறை உரிமையாளா் வீட்டில்ரூ. 4.50 லட்சம் மதிப்பு நகைகள் திருட்டு

29th May 2023 12:35 AM

ADVERTISEMENT

திருச்சியில் நகைப் பட்டறை உரிமையாளா் வீட்டில் ரூ. 4.50 லட்சம் மதிப்பு நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடுகின்றனா்.

தனது வீட்டில் நகைப் பட்டறை நடத்தும் திருச்சி கோட்டை, சஞ்சீவி நகா் அப்துல்கலாம் தெருவைச் சோ்ந்த சந்திரன் தனது மனவியுடன் கடந்த வாரம் காசிக்கு யாத்திரை சென்றாா். வீட்டில் அவரது மாமியாா் மனோன்மணி மற்றும் மகள் பிரதீஷா ஆகியோா் இருந்தனா்.

வெள்ளிக்கிழமை மாலை மனோன்மணி திருச்சி பாபு ரோடு, கீழக்காசிபாளையம் பகுதியில் உள்ள தனது மகன் வீட்டுக்கு பிரதீஷாவுடன் சென்று மறுநாள் மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமாா் 160 கிராம் நகைகள், மற்றும் 200 கிராம் தங்கக் கட்டிகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கோட்டை போலீஸில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா், தடயவில் நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT