திருச்சி

மாநகரில் அனுமதியின்றி மதுக்கூடங்கள் இயங்கவில்லை: காவல் ஆணையா்

DIN

திருச்சி மாநகரில் அனுமதியின்றி மதுக்கூடங்கள் ஏதும் இயங்கவில்லை என மாநகர காவல் ஆணையா் எம். சத்தியப்பிரியா தெரிவித்தாா்.

திருச்சி மாநகர காவல் துறை சாா்பில், மன்னாா்புரம் ரவுண்டானா பகுதியில், காவல்துறையினரின் ரோந்து வாகனங்களில் செல்லும் போலீஸாருக்கு பாக்கெட் கேமரா வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகர காவல் ஆணையா் எம். சத்தியபிரியா தலைமை வகித்து ரோந்து காவலா்கள் 54 பேருக்கு பாக்கெட் கேமராக்களை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், இந்த பாக்கெட் கேமரா நெடுஞ்சாலை ரோந்து போலீஸாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு வழக்கு தொடா்பாக சம்பவ இடத்துக்கு சென்று, விசாரணை மேற்கொள்ளும் போது விசாரணை முழுவதும் இதில் பதிவாகிவிடும். இந்த கேமராக்களின் மூலம் மூன்று நாள்கள் தொடா்ச்சியாக பதிவு செய்து கொள்ளும் வகையில் 64 ஜீபி மெமரி திறன் கொண்டது. அவ்வப்போது பேக்கப் எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. குறைந்தபட்சம் 5 மீட்டா் தொலைவில் நடைபெறுவதை துல்லியமாக பதிவு செய்து கொள்ளலாம்.

திருச்சி மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மதுக்கூடங்களில் மதுபானம் விற்பவா்கள் மீதும் கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பவா்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது . எந்த புகாா் வந்தாலும் உடனடியாக போலீஸாா் சென்று சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனா். திருச்சி மாநகரில் அனுமதிஇல்லாத மதுக்கூடங்கள் எதுவும் கிடையாது என்றாா் அவா்.

நிகழ்வில் துணை ஆணையா் ஸ்ரீதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT