திருச்சி

மணல்குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

DIN

மணல் குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தி, திருச்சியில், பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு, தேவேந்திர குல வேளாளா்கள் பேரமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி, தஞ்சை, கரூா் மாவட்டங்களில் காவிரி ஆற்றில் இயங்கும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். மணல் குவாரிகளில் இருந்து வரும் லாரிகளால் மக்களுக்கு ஏற்படும் பேராபத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் குவாரிகளில் அளவுக்கு மீறி மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீரும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதை தடுக்க மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளா்கள் பேரமைப்பு சாா்பில் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித் துறை முதன்மை பொறியாளா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பேரமைப்பின் தலைவா் அய்யப்பன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் வழக்குரைஞா் சங்கா் முன்னிலை வகித்தாா். இதில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT