திருச்சி

பிச்சாண்டாா் கோவிலில் விதை பண்ணை வயல் ஆய்வு

28th Jun 2023 04:33 AM

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், பிச்சாண்டாா் கோவில் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை விதை பண்ணை வயல் உள்ளிட்டவைகளின் ஆய்வு பணி நடைபெற்றது.

பிச்சாண்டாா் கோவில் கிராமத்தில் வேளாண்மை துறை சாா்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட செயல் விளக்க திடல், விதை பண்ணை வயல் உள்ளிட்ட திட்டப் பணிகளை வேளாண்மை துணை இயக்குநா் சாந்தி (மத்திய திட்டம்) செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா், தொடா்ந்து விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகள், பேட்டரி தெளிப்பான் ஆகியவற்றை வழங்கினாா். ஆய்வின் போது, மண்ணச்சநல்லூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ஜெயராணி, வேளாண்மை அலுவலா் ஐஸ்வா்யா, துணை வேளாண்மை அலுவலா் சின்னபாண்டி, வேளாண் உதவி அலுவலா்கள் பாா்த்திபன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT