காவல்துறையினா் இதய நோயால் பாதிக்கப்படாமல் இருக்க முறையான உடற்பயிற்சி அவசியம் என திருச்சி மாநகரக் காவல் ஆணையா் எம். சத்தியபிரியா தெரிவித்தாா்.
திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் ‘இதயம் காப்போம் என்ற தலைப்பிலான விழிப்புணா்வு நிகழ்ச்சி திருச்சி விமான நிலைய சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வினை மாநகர காவல் ஆணையா் எம். சத்தியபிரியா தொடங்கி வைத்துப் பேசுகையில், திருச்சி மாநகர காவல்துறையினா் இதய நோயால் பாதிக்கப்படாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். விழிப்புணா்வுடன் நடந்து கொள்ள வேண்டும். முறையான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். மருத்துவா்களின் ஆலோசனைப்படி உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இதய நோயை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தடுப்பு மாத்திரையை எப்போதும் தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்றாா்.
இதில் இதயநோய் மருத்துவ நிபுணா்கள் அரவிந்தகுமாா், ஆண்ட்ரூ
தாஸ் ஆகியோா் பேசுகையில், இதயத்தைப் பாதுகாக்க சரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை இதயம் தொடா்பான மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றனா்.
நிகழ்வில் திருச்சி மாநகர துணை ஆணையா்கள் அன்பு, ஸ்ரீதேவி, உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள், காவலா்கள் என 400 போ் கலந்து கொண்டனா்.