திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் வரும் 16ஆம் தேதி உறையூா் நகா் நல மையத்தில் நடைபெறுகிறது.
இந்த சிகிச்சையை ஏற்கும் ஆண்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1100, ஊக்குவிப்பாளா்களுக்கு ரூ.200 வீதம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் செய்யப்படும் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமில்லை. வீட்டுக்குச் செல்லலாம். கத்தியின்றி, ரத்தச் சேதமின்றி செய்யப்படும் இக்கருத்தடை சிகிச்சையால் பின்விளைவுகள் ஏதும் இருக்காது.
எனவே, விருப்பமுள்ள ஆண்கள்பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட குடும்ப நல அலுவலகத்தை 0431- 2460695 என்ற எண்ணிலும், மாவட்ட விரிவாக்க கல்வியாளரை 94432 46269 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன் பெறலாம். திருச்சி மாவட்ட ஊரக நலப்பணிகள் துணை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.